Saturday, August 8, 2009

குதிரை


உழவுத் தொழில் காலத்திற்குப் பின் மனிதனுக்குப் பயன்படும் விலங்காக குதிரை இருந்துள்ளது.

மாட்டைச் செல்வமாகக் கருதிய இந்தியாவில், குதிரைக்கு அந்த இடம் இல்லை. இன்றும் இந்தியாவில் ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்குச் செல்ல மாட்டு வண்டியே பிரபலம்.

குதிரையை அரசர்கள் போருக்கும், அவசரத் தேவையாக, ஒற்று அறிதலுக்கும் பயன்படுத்தினர்.

தமிழ்நாட்டில் குதிரைப் பயன்பாடு மிகவும் குறைவு- வளர்ப்புப் பிராணியாக இல்லவே இல்லை எனலாம்.

1..அசுவாதி சாஸ்திரம் (1883),
2. மாட்டு வடாகம் (1913) (ஏன் குதிரை வடாகம் என்று இல்லை ? )
ஆகியவை தமிழில் குதிரை குறித்த நூல்கள்.

1. குதிரை பிறந்த நேரம்,
2. பற்களால் ஆயுள் அறியும் வகை,
3. எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய சுழிகள்,
4. நாடியறிந்து அதன் மூலம் வியாதி வகைகள் அறிவது

என்று இந்த நூல்களில் குதிரை பற்றிய தகவல்கள் உண்டு.
இன்று குதிரைகள் பந்தயத்திற்கும், காட்சிப் பொருளாகவும், பீச்சில் சவாரி செய்யவுமே பயன்பட்டு வாழ்கின்றன.

ஆனால், சதுரங்க ஆட்டத்தில் இந்த குதிரையின் பங்கு மகத்தானது.
ஆட்டத்தில் சிறந்து விளங்க விரும்பும் எவரும்,
இந்த குதிரையின் போக்கைக் கணித்து ஆட வேண்டியது மிகவும் அவசியம்.

இதற்குப் பயிற்சியாக ஒரு விளையாட்டு உண்டு.

இந்தப் பயிற்சி விளையாட்டிற்கு ஒரு குதிரை மட்டுமே பயன்படுத்தப்படும்.மேலும்

மேலும்

ஒரு குதிரையின் பயணம்

No comments:

Post a Comment